Saturday, April 1, 2017

இந்தியாவின் பெருவாரியான குடிமகன்களின் அடிமனதில் சிறுபான்மையினர் மேல் கடுமையான வெறுப்பும் வன்மமும் உள்ளது.

இந்தியாவின் பெருவாரியான
குடிமகன்களின் அடிமனதில்
சிறுபான்மையினர் மேல்
கடுமையான வெறுப்பும்
வன்மமும் உள்ளது.

அவர்கள் மறைமுகமாய்
மதக்கலவரங்களை ஆதரிக்கிறார்கள்.

அதனால் தான் இக்கலவரங்களை
நடத்தி ஆயிரக்கணக்கானோர்
சாக காரணமாய் இருந்தவர்களை
ஓட்டளித்து பதவியில் அமர
வைக்கிறார்கள்.

இந்த வன்மத்தின் அடிப்படையை
களைவது பற்றி யோசிக்க வேண்டும்.

ஒரு கருத்தில் இருந்து தான்
பெரும் குற்றங்கள் நிகழ்கின்றன.

அக்கருத்தை வேரறுக்க வேண்டும்.
அத்வானிகளும் மோடிகளும்
அக்கருத்தின் வெறும் புறவடிவங்கள்.

அவர்கள் இடத்தில் நாளை
நூறு பேர் வருவார்கள்..."

# நன்றி - Abilash Chandran

No comments:

Post a Comment