Saturday, April 1, 2017

மெக்கால்லே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு உரையின் ஒரு பகுதி.

"மெக்கால்லே இந்தியக்
கல்வி குறித்து இங்கிலாந்துப்
பாராளுமன்றத்தில் ஆற்றிய
ஒரு உரையின் ஒரு பகுதி.
அதில் சொல்லியிருப்பது
அவர் இந்தியாவின் எல்லா
பகுதிகளுக்கும் சென்றதாகவும்
ஒரு திருடனையோ ஒரு
பிச்சைக்காரனையோ எங்கும்
காண முடியவில்லை என்றும்
இந்த தேசம் அவ்வளவு பண்பாடு
நிறைந்ததாகவும் ஆன்மீக
பலம் பொருந்தியதாகவும்
உள்ளது. எனவே அதை
அடிமைப் படுத்த நாம்
அவர்களின் தொன்மையான
கல்வி முறையை ஒழித்து
விட்டு ஆங்கில வழி கல்வியைப்
பயன்படுத்தலாம்"

அடித்துச் சொல்கிறேன் மெக்கால்லே
அவ்வாறு சொல்லவே இல்லை.
அவர் அதை இங்கிலாந்துப்
பாராளுமன்றத்தில் சொன்னதாகச்
சொல்லப் படும் 2-2-1835 ஆம் தேதி
அவர் இங்கிலாந்தில் இல்லை.
அவர் இந்தியாவில் இருந்தார்.
சரி அவர் சொன்னது அவருடைய
நாட்குறிப்பில் இருக்கும் என்று
தோண்டி எடுத்துப் பார்த்தால்
ஆயிரம் பக்கத்தில் ஒரு இடத்திலும்
இல்லை.


Full details:
http://thurukal.blogspot.in/2015/08/blog-post.html

அவருடைய நாட்குறிப்பு:
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00generallinks/macaulay/txt_minute_education_1835.html

No comments:

Post a Comment