Saturday, April 1, 2017

மோடி மீதான குஜராத் படுகொலை வழக்கு இன்னும் முடியவில்லை.

மோடி மீதான குஜராத் படுகொலை
வழக்கு இன்னும் முடியவில்லை.
விசாரணை நீதிமன்றத்திலிருந்து
மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்னும்
நிலுவையில் உள்ளது. பிறகு உச்ச
நீதிமன்றம். உச்சநீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட அமிகஸ்க்யுரி ராஜீ
ராமச்சந்திரன் மோடிக்கு இப்படுக்
கொலையில் தொடர்புள்ளதற்கான
முகாந்திரம் உள்ளது என்று தனது
அறிக்கையில் தெளிவாக
குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.ஐ.டி முடிவோடு முழுக்க
முரண்பட்ட முடிவு இது.
படுகொலை வழக்கு நிலுவையில்
இருக்கும் போதே மோடி
எப்படி நிரபராதி ஆகிவிடமுடியும்?

போபார்ஸ் வழக்கில் உயர்நீதிமன்றம்
ராஜீவ்காந்தி உட்பட அனைவரையும்
விடுவித்துவிட்டது. "13ஆண்டுகள்
அலைந்து சிபிஐ ஒரு சிறிய
ஆதாரத்தைக்கூட கண்டுபிடிக்க
முடியவில்லை .அரசியல்
உள்நோக்கத்தோடு ராஜிவ் காந்தி
உட்பட அனைவர் மீதும் அவப்பெயர்
ஏற்படுத்த போடப்பட்ட வழக்கு. ஊடக
விசாரணை (Media trial)
எவ்வளவு மோசமாக ஒருவரின்
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த
முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

25ஆண்டுகளுக்குப் பிறகும் கார்கில்
போரில் போபர்ஸ் பீரங்கி தனது
தரத்தை நிரூபித்து நமது இளம் ராணுவ
வீரர்களின் உயிரைக் காப்பாற்றி
வெற்றிதேடிக் கொடுத்தது" என்று
நீதியரசர் ஜேடி கபூர் தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார் .

இந்த தீர்ப்பு வந்தது 04.02.04 பிஜேபி
ஆட்சியில். அன்றைய சட்ட அமைச்சர்
அருண் ஜேட்லி ஆதாரமில்லாத வழக்கை
இதற்குமேல் நடத்த முடியாது என்று
அப்போதைய அடிசனல் சொலிசிட்டர்
ஜெனரல் முகில் ரோத்தங்கியின்
அறிவுரையை ஏற்று அப்பீல் செய்யாமல்
வழக்கை கைவிட்டனர். பிஜேபி ஆட்சியில்
முடிக்கப்பட்ட வழக்கு அது .

நிரபராதியான ராஜீவ்காந்திமீது இன்றும்
பழிசொல்கிறது பிஜேபி. பிறகு எப்படி
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை
படுகொலை செய்த வழக்கு மோடி மீது
நிலுவையில் இருக்கும்போது மோடி
எப்படி நிரபராதி ஆவார்? அந்த வழக்கை
நடத்துகிற சமூகப் போராளி தீட்சா செதல்வாட்டை
மோடி அரசு பழிவாங்கத் துடிப்பதும், கைது
செய்து சிறையில் அடைக்க அலைவதுமே
மோடி எவ்வளவு பெரிய குற்றவாளி
என்பதற்கான சான்று .

-Jothimani Sennimala

No comments:

Post a Comment