Saturday, April 1, 2017

பதில் தாக்குதல் உறுதி என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்

தென் மாவட்டங்களில் இன்றைக்கு ஓரளவு ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதலுக்கு அஞ்சுகிறார்கள் என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் பதில் தாக்குதல் உறுதி என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள், தலைக்குத் தலை என்கிற கணக்கீட்டுக்குள் அவர்கள் வலிந்து உள்ளீடு செய்யப்பட்டார்கள்.

ஆகவே, சமூக நீதியை நோக்கி மனித இனம் பயணிக்கும் போது சில இழப்புகளை நாம் சந்திக்கவே நேரிடுகிறது, அந்த இழப்புகள் நமது குழந்தைகளின் விடுதலையைக் கொண்டு வருமாயின் அதற்கு நம்மை நாமே தயார் செய்து கொள்வது குற்றமாகாது.

எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட சூழலில் சாதி வெறி கொண்டலையும், எமது குழந்தைகளின் தலையை அறுக்கும் இந்தக் காட்டுமிராண்டி சமூகத்தில் நாம் இனி ஆயுதங்களை வைத்துக் கொள்ளச் சொல்லிப் பழக்குவதுதான் அடுத்த சிறந்த ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் நகர்வாக இருக்கும் போலிருக்கிறது.

உயிர்ப் பாதுகாப்புக்காகவும், மானமிழப்பில் இருந்து தப்பிக்கவும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது இந்திய சட்டங்களின்படி குற்றமா என்ன?

-Arivazhagan Kaivalyam

No comments:

Post a Comment