Saturday, April 1, 2017

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு ‪விடுதலை‬ உண்டாகுமா? - தோழர் ‎பெரியார்‬

‪‎ஆண்கள்‬, ‪‎பெண்கள்‬ விடுதலைக்குப் பாடுபடுவதனால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன.

பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

எங்காவது பூனைகளால் எலிகளுக்கு ‪விடுதலை‬ உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதவர்களுக்குச் ‪‎சமத்துவம்‬ கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

- தோழர் ‎பெரியார்‬

No comments:

Post a Comment